Tuesday, September 1, 2015

சித்தர்கள் யார் ?





Thank : https://sitharkal.blogspot.com


சித்தர்கள் கூடுவிட்டுக்கூடு பாய்தல்... ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடங்களில் தென்படுதல்... சட்டென்று மறைந்து தோன்றுதல் போன்ற எண்ணற்ற சித்தாடல்களை செய்திருக்கிறார்கள். 'இதெல்லாம் சாத்யமா?'என்று நாம் யோசிக்கத்தோன்றும் அவர்கள் அதையெல்லாம் நிஜம் என்று உணர்த்துகிறார்கள்.

மனித உடல் ஐந்து வகை என்கிறார்கள். முதலில் உயிர்க்காற்றால் வளர்க்கபடுகிறது காற்றுடல் அடுத்து உணர்வுகளினால் வளர்க்கப்படுகிறது. மன உடல் அடுத்து எண்ணங்களால் உருவாக்கப்படுகிறது அறிவு உடல். அதற்கடுத்து உணர்வுகளால் வளர்க்கப்படுகிறது. மன உடல். இந்த மூன்றிற்கும் மையமாக பேரின்ப உணர்வில் வளர்க்கப்படுகிறது. இன்ப ஆனந்த உடல். ஆக... அன்னமய உடல் பிராணமய உடல் மனோமய உடல் விஞ்ஞான மய உடல் ஆனந்த மய உடல் என ஐந்து வகை உடல்களை ஒவ்வொரு மனிதனும் பெற்றிருக்கிறான். என்கிறார்கள். இந்த ஐந்து உடல்களும் ஆன்மா என்கிற உயிருக்கு மேலே ஒன்றின் மீது ஒன்றாக பதிந்திருக்கின்றன. ஆனால் இவை ஒன்றையொன்று ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. எங்கும் நிறைந்து ஒளி வீசும் நுண்ணிய உணர்வு படிப்படியாகத் நுண்மையை இழந்து பருமையாகி நம் கண்களுக்கு தெரிகிற பரு உடலாகிறது என்கிறார்கள் சித்தர்கள்.

அப்படியென்றால் உயிரின் பணி என்று கேட்கலாம். நம் ஆன்மா என்பது உடல் என்கிற மரப்பொம்மையை அசைய வைக்கிற சக்தியாகும். சித்தர்கள் ஆன்மாவை திடமாக நம்பியவர்கள். "உயிரு நம்மையால் உடலெடுத்து வந்திடும்" என்கிறார் சிவவாக்கியர். அதே போன்று "உயிர்த்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்ற தப்புவில்" என்கிறார் கடுவெளிச்சித்தர். "உயிரெனும் குருவி விட்டோடுங்குரம்பை" என்று உயிரை உடலில் குடியிருக்கும் பறவையாக குறிப்பிடுகிறார் பட்டினத்தார். உடலை ஆட்டுவிப்பது உயிர் என்பதை குறிக்கும் விதமாக "நந்த வனத்திலோர் ஆண்டி" பாடலில் விளக்குகிறார் திருமூலர். அதுமட்டுமல்ல "சூரியனின் வெப்பத்தால் கடல் நீர் உப்பாகிறது. அந்த உப்பு மீண்டும் தண்ணீரில் கரையும் போது தண்ணீரில் அடங்குகின்றது. உப்பு எங்கிருந்து வந்ததோ அங்கேயே அடங்குவதைப்போன்று உயிர் சிவத்திலிருந்து தோன்றிச் சிவத்துக்குள்ளேயே அடங்கும்" என்கிறார்.

உயிர்கள் நான்கு வகைத் தோற்றமாகவும் ஏழு வகைப் பிறப்பாகவும் என்பத்து நான்கு லட்சம் உருவ வேற்றுமைகளோடும் பிறக்கின்றன என்கிறது சிவஞான சித்தரின் நூல். அதிலும் பட்டினத்தார் தனது பாடலில் "புல்லாகி பூண்டாய் . கல்லாய் மரமாய் கீரியாய் நரியாய் ஊர்வனவாய் பூதமொடு தேவருமாய் வேதனை செய்வதானவராய் உயிர்கள் பிறக்கின்றன என்கிறார்.
ஆக சித்தர்கள் ஆன்மாவையும் உடலையும் மிக துள்ளியமாக அறிந்து உடல் இயக்கத்தை ஆராய்ந்த நூல் தான் அவர்களால் 'மாயை' என்கிற அமானுஷ்யத்தை நிகழ்த்த முடிந்தது. கூடுவிட்டு கூடு பாய்தல் பல இடங்களில் தோன்றி மறைதல் போன்ற அற்புதங்களை செய்ய முடிந்தது.



https://groups.google.ge/group/Piravakam/msg/735a53f849265467?
Posted by பிரபஞ்சத் தமிழன் at 8:24 PM SATURDAY, AUGUST 8, 2009


No comments:

Post a Comment