Saturday, January 10, 2015

பிருகு மகரிஷி குரு விழா

பிருகு மகரிஷி குரு விழா / Bhrigu Maharishi Guru Pooja -2015
Location : Maruderi, Singaperumal Koil / மருதேரி, சிங்கபெருமாள் கோவில்
 Date: 2nd JAN 2015 (ROHINI STAR) / மார்கழி மாதம் ரோகினி நட்சத்திரம்




மார்கழி ரோகினி அன்று 1500 உயர்ந்த உள்ளங்கள் வந்து விழாவை சிறப்பித்தனர். மருதேரி அன்று அன்பாலும் குருமார்களின் பெரும் ஆற்றலாலும் நிறைந்து இருந்ததை எல்லோராலும் உணர முடிந்தது. சில உயர்ந்த உயிர்களான நாக பாம்பும், வானர வாயு தேவனும், வவ் வால்களும், தேரையும், பட்டாம் பூச்சியும் பெரிதும் கலந்து கொண்டனர் .இதில் பதினென் சித்தர்களும், வேதவியாசர், வாயுதேவன் ,கோரக்கர் , அகோர வீர பதிரர் , மேலும் பலர் அரூப-ரூபங்களாக கலந்து வந்த அனைவரையும் ஆசிர்வதித்தனர். பிரிகுவின் சீடவர்க்கம் 3 நாட்களாக மந்திர அதிர்வாலும், தியானத்தாலும், உயர் சங்கல்ப்பதாலும் செய்த அமிர்தம் 1500 அடியார்களுக்கு குருவின் நினைவுடன் வழங்கப்பட்டது

1500 அடியார்களுக்கு  செய்த பூநீர் திருவடி பூசை, 1500 மாபெரும் சிவலாயங்களில் செய்த நந்தி பிரதோஷம் செய்த பலனையும் அதிர்வுகளையும் அங்கு தந்தது. இதனை குறிப்பது  போல, குருபூசை நடந்த நாள் பிரதோச தினத்தன்று தான். மேலும் பிரதோஷ நேரத்தில் நடந்த வருணனின் சாரலும், வாயுபுத்திரன் வருகையும் தான்.

யோக மார்கத்தில் உள்ள சிலர் காரணம் அறியாமல் கண்ணீர் சொரிந்தனர். இஸ்லாத்தை தழுவிய நண்பர்களும் அங்கு தொழுகை செய்தனர். உணவு உண்டவர்கள் சுவையாலும், சூழ்ந்த அற்றலாலும் நிறைவை தாண்டியும் அமுது உண்டனர்.

அனைவரும் அகத்தியர் அருளிய மருந்தை அமுதமாக உண்டு சென்றனர். மழலையரும் சிறுவர் சிறுமியரும் இந்த ஔஷதத்தை உண்டார்கள்.

அன்பாலும் அறிவாலும் நோய் அற்ற சன்மார்கத்தை உருவாக்குவோம்.
thank:https://18siddhar.blogspot.com/2015/01/1000-lotus-40kgs-amla-100-brahmi-siddha.html

No comments:

Post a Comment