Friday, December 5, 2014

சும்மா இரு SUMMAIRU

SUMMAIRU -சும்மா இரு
சித்தர் தன் மாணவனிடம் விளக்கம் தருகிறார்.


உன்னை அறிவித்தது யார்? இந்த உலகத்தை அறிவித்தது யார்?.

என்னை அறிவித்தது எது? என்று ஆராயும்போது என்னை குனிந்து

பார்கிறேன். எனக்கு இரண்டு கைகள் இரண்டு கால்கள் மற்றும் உடம்பு இருப்பதை

அறிந்தேன். எப்படி அறிந்தேன்? யார் அறிவித்தது? என்று ஆராயும்போது அறிவு தான்

அதை உணர்த்தியது என்பதை தெரிந்துகொண்டேன். இந்த உலகத்தை அறிவித்ததும் அதே

அறிவுதான் என்பதை தெரிந்துகொண்டேன் . நான் யார் என்று ஆராயும்போது நானும்

அறிவாகவே உள்ளேன் என்பதை அறிந்துகொண்டேன். அறிவே எல்லாமாக இருக்கிறது. உலக

பொருட்கள் எல்லாம் அறிவின் தத்துவமே உண்மையில் அவை மாயையே. மாயையும்

அறிவிலேருந்து தோன்றியது. இங்கே அறிவு மட்டுமே உள்ளது. ஆகையால் மற்றவையெல்லாம்

மாயையே என்று அறிந்து சும்மா இருத்தல் சித்தி அளிக்கும். சும்மா இருத்தல்

என்பது நாம் அறிவு என்பதை உணர்ந்துகொண்டு நம்மை சுற்றி எது நடந்தாலும் அதை

பற்றி ஆராயாமல் அதில் தலையீடாமல் சும்மா இருத்தலே சும்மாயீரு ஆகும். உண்மையெய்

உணராமல் அறிவாகிய நாம் புலன்கள் வழியாக தன்னை சுற்றி இருக்கும்

மாயையை ஆராய்ந்து துன்பபட்டுகொண்டு இருக்கிறோம் அறியாமை விலகியதும் அமைதி

ஏற்படுகிறது அதிவே சும்மா இருத்தல் ஆகும். முழுமையான அறிவில் புலனுணர்வு

எல்லாம் கடந்து சும்மா இருப்பதே சுகமாகும். அங்கெ நானும் இல்லை உலகமும் இல்லை

இறைவனாகிய அறிவும் இல்லை எதுவுமே இல்லை என்பதே உண்மையாகும். நாமும் சும்மா

இருக்க முயற்சி செய்வோம்.

----உயிர். 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete