Monday, December 15, 2014

சனிப்பெயர்ச்சி யாகம்

என் நண்பர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் 
12 ராசிகளுக்குமான சனிப்பெயர்ச்சி பலன்கள் – 2014
(வீடியோக்கள் : ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக…)

தமிழகத்திலேயே முதல் முறையாக உங்கள் கையால் சனிப்பெயர்ச்சி யாகம்...



தமிழகத்திலேயே முதல் முறையாக உங்கள் கையால் சனிப்பெயர்ச்சி யாகம்
தமிழகத்திலேயே முதல் முறையாக உங்கள் கையால் சனிப்பெயர்ச்சி யாகம்

ஓம் கணபதி துணை - ஓம் குரு பகவான் துணை - ஓம் வேம்புலி அம்மன் துணை - ஓம் சனிபகவான் துணை

நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி - 16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் 
துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். 

அடுத்த இரண்டரை வருட காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.


உத்தம பலன் பெறும் ராசிகள்: கடகம், கன்னி, மீனம்

மத்யம பலம் பெறும் ராசிகள்: மிதுனம், மகரம், கும்பம்

அதம பலம் பெறும் ராசிகள்: மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு



இதில் அனைத்து ராசிக்காரர்களும் பரிகாரம் செய்யலாம். 

மேலும் மத்யம பலம் மற்றும் அதம பலம் பெறும் ராசிக்காரர்களும், லக்னக்காரர்களும் கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டும். மேலும் சனி திசை, புத்தி, அந்தரம் நடப்பவர்கள் மற்றும் அசுபதி, பரணி, பூசம், விசாகம், அனுஷம், உத்திரட்டாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகிய நபர்களும் பரிகாரம் செய்யலாம். மற்றும் பிதுர் தோஷம் உள்ளவர்கள், சொத்து சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், தொழில் முடக்கம், உத்தியோகத்தில் பிரச்சனை உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் பெற, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க கலந்து கொள்ளுங்கள்.    


இதற்குண்டான ஹோமம் பரிகாரம் 16-12-2014 அன்று குரோம்பேட்டை நெமிலிச்சேரி வேம்புலி அம்மன் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவேம்புலி அம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது.  அன்று மஹாகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சனிப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜையும் நடைபெறுகிறது. 


தமிழகத்திலேயே முதல் முறையாக உங்கள் கையால் ஹோமம் செய்யலாம்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக உட்கார்ந்து ஹோமம் செய்யலாம். பூஜைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் அங்கே வழங்கப்படும். 


பூஜை மற்றும் பரிகாரங்கள் நடத்தி வைப்பவர்: 

தினமணி, தினகரன் மற்றும் ஞான ஆலயம் 
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
face book : https://www.facebook.com/ramakrishnan.josiyar?fref=ts

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete